• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற பயங்கரம் : இருவர் பலி

Jan 2, 2024

சுவிட்சர்லாந்தின் அல்பைன் நகரமான சியோனில் திங்கட்கிழமை அதிகாலைவேளை இனந்தெரியாத ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

நகரின் இரண்டு பகுதிகளில் பல துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தென்மேற்கு வலாய்ஸ் கன்டோனில் உள்ள காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 34 வயதுடைய பெண்ணும் 41 வயதுடைய ஆண் ஒருவருமே என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், காவல்துறையினர் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து, சோதனைச் சாவடியை அமைத்து, கான்டனுக்கு வெளியே பிரதான சாலையில் கார்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதன்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed