• So.. Jan. 25th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முல்லைத்தீவு பகுதியில் இரு மாணவிகளை காணவில்லை!

März 17, 2022

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் 14வயதுடைய இரு மாணவிகளை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் நேற்று மாலைநேர வகுப்பிற்காகச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் முல்லைத்தீவு  பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.