வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்தப் பொங்கல் விழா நாளை செவ்வாய்க்கிழமை(12.4.2022) சிறப்புற இடம்பெறவுள்ளது.

அதிகாலை-05 மணிக்குத் திருப்பள்ளி எழுச்சி, உஷக் காலப் பூசை என்பன இடம்பெற்றுக் காலை-06 மணிக்கு ஸ்நபன அபிஷேகம், வழுந்துப் பானை வைத்தல் நிகழ்வும், தொடர்ந்து காலை-08 மணிக்கு காலைப் பூசை, கூட்டு வழிபாடும், முற்பகல்-10 மணிக்கு ஸ்நபன அபிஷேகமும், முற்பகல்-11 மணிக்கு உச்சிக்காலப் பூசையும், முற்பகல்-11.30 மணிக்கு வசந்தமண்டபப் பூசையும், அம்பாள் உள்வீதி உலாவும் நடைபெறும்.

பிற்பகல்-4.30 மணிக்கு சாயரட்சைப் பூசை இடம்பெற்றுப் பிற்பகல்-04.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசையும் அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள் உள்வீதி, வெளி வீதி உலாவும், இரவு-07 மணிக்கு அர்த்தசாமப் பூசையும் இடம்பெறும்.

இதேவேளை, இவ் ஆலய வருடாந்தப் பொங்கல் விழாவை முன்னிட்டுப் பொங்கிப் படைக்கும் அடியார்கள் ஆலய இராஜகோபுரத்தின் முன்பாக அமைக்கப்பெற்றிருக்கும் தற்காலிக மண்டபத்தில் படையல்களைப் படைத்து நேர்த்தியைப் பூர்த்தி செய்யலாம் என மேற்படி ஆலய நிர்வாகசபை அறிவித்துள்ளது.

Von Admin