• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புலோலியில் கீரி கடித்த வயோதிபப்பெண் உயிரிழப்பு

Mai 10, 2022

கீரி கடிக்குள்ளாகிய வயோதிபப் பெண் 3 மாதங்களின் பின் உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புக்கு நீர்வெறுப்பு நோய் காரணம் என்று மருத்துவ அறிக்கையிட்டுள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்த வயோதிபப் பெண்ணின் மூளையை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்ப சட்ட மருத்துவ வல்லுநர் க.வாசுதேவா பணிந்துள்ளார்.


இந்த நிலையில் 3 மாதங்களின் பின் அவர் நேற்று உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு நீர்வெறுப்பு நோயே காரணம் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
மந்திகை ஆதார மருத்துவமனையில் சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
அவருக்கு நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்ய மூளையை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்ப பணித்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed