வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று(29) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து  15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள  நாகபூக்ஷணி அம்மன் மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு சப்பரத் திருவிழா இடம்பெறவுள்ளது.

 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை இரதோற்சவமும் மறுதினம் புதன்கிழமை காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.

Von Admin