• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் கடவுச்சீட்டு வரிசையில் பிறந்த குழந்தை!

Jul 7, 2022

கடவுச்சீட்டை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி தாயொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு காரியாலயத்துக்கு முன்பாக வரிசையில் கடவுச்சீட்டு பெறுவதற்காக, குறித்த பெண் வரிசையில் காத்திருந்துள்ளார்.

பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த இராணுவத்தினரால் பொரளை – காசல்வீதி மகளிர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் குழந்தையை பிரசவித்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தாயும் கைக்குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed