• Di.. Feb. 18th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வடமராட்சியில் 12 பேர் கைது

Juli 30, 2022

அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாக பயணிக்க முயன்ற 12 பேர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வைத்து இன்று சனிக்கிழமை அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 8 ஆண்களும் 4 பெண்களும் தங்கியிருந்த வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் 

கைது செய்யப்பட்ட 12 பேரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு ஆரம்ப கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed