• So.. Juni 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் நகரில் 8 கிலோ கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

Aug. 31, 2022

யாழ் நகரில் நயினாதீவை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் 8.5 Kg கிலோகிராம் கஞ்சாவுடன்  கைது செய்யப்பட்டுள்ளார்.

நயினாதீவிலிருந்து கொழும்பிற்கு அனுப்புவதற்கு கொண்டு வந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையின் கீழ் செயற்படும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் செயற்படும் பொலிஸ்பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் அணியினரால் குறித்த கைது சம்பவ இடம் பெற்றுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.