• Di.. März 17th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் கந்தர்மடம் பகுதியில் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழப்பு!

Sep. 9, 2022

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடம் பகுதிக்கு அருகே இடம்பெற்ற விபத்தில் மோட்டார் வண்டியில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

கிருஷ்ணகுமார் சரவணபவன் என்கிற 32 வயதுடைய பட்டதாரி இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

நேற்று(08) இரவு 9.40 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து திருநெல்வேலி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவரே கந்தர்மடம் பகுதி அருகே உள்ள மரத்துடன் மோதுண்டு மயக்கமுற்றார்.

உடனடியாகவே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் உயிரிழந்தார்.

உயிரிழப்புக்கு அதிவேகமாக மோட்டார் வாகனத்தை செலுத்தியமையே காரணம் என தெரியவருகிறது.

உயிரிழப்பு தொடர்பான மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமவசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.