சரஸ்வதி பூஜையன்று செய்ய வேண்டிய பூஜைகளை வழக்கம் போல் செய்து, புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூ சார்த்த வேண்டும். நடுவில் நான்கு இதழ்களும் சுற்றிலும் எட்டு இதழ்களும் கூடிய தாமரைக் கோலமிட்டு அலங்கரிக்கவும். மையத்தில், ஓம்… என்றும் எல்லா இதழ்களிலும், ஐம் என்றும் எழுதவும். மையத்தில் திருவிளக்கும் நான்கு மற்றும் எட்டு இதழ்களில் தீபங்கள் ஏற்றி வைக்கவும்.பால் கற்கண்டு சாதம் மற்றும் இனிப்புப் பண்டங்களுடன், கடலை சுண்டலும் நிவேதனம் செய்து, சூடம் ஏற்றிக் காண்பிக்கவும். சுமங்கலிகளுக்கு சந்தனக்கலர் ரவிக்கைத் துண்டுடன், மங்களப் பொருட்களும் வழங்கி, நிறைவில் ஆரத்தி எடுத்து தீபத்தை பூஜையறையில் சேர்த்து நிறைவு செய்யவும்.ஸ்ரீ சரஸ்வதி, நிலவின் குளிர்ச்சியான வெண்ணிறம் உடையவள். வெண்பட்டாடை அணிபவள். வெண்தாமரையில் அமர்ந்து வீணை இசைப்பவள். பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் முதலிய தேவர்களும் ஞானம் பெற வேண்டி வழிபடப் படுபவள். உலக உயிர்களின் அறியாமை இருளைப் போக்கும் அந்த சரஸ்வதி தேவி, எனக்கும் நல்லறிவு அருளி காப்பாற்ற வேண்டும்.
நவராத்திரி ஒன்பதாம் நாள் சொல்ல வேண்டிய மந்திரம்
![](https://usercontent.one/wp/www.siruppiddynet.com/wp-content/uploads/2022/10/sasvathii.jpg)