வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் இன்று பிற்பகல் 5:00 மணியளவில் கற்கோவளம் சமுத்திரத்தில் இடம்பெற்றது.
வல்லிபுர ஆழ்வார் ஆலய வசந்த மண்டப பூசைகள் மாலை 3:00 மணியளவில் ஆரம்பகமாகி வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னே செல்ல பிள்ளையார்மற்றும் லட்சுமி சகிதம் கற்கோவளம் சமுத்திரத்திற்கு சென்று சக்கரத்து ஆழ்வாருக்கு சமுத்திர உற்சவம் இடம் பெற்றது.
நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ இடம் பெற்ற வல்லிபுரத்து ஆழ்வாரின் சமுத்திர உற்சவம் இடம்பெற்றுள்ளது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/da8d3233-3c52-43a5-a619-8c1521994d32/22-6342efb73f556.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/4487f5ef-55d1-44d7-adfa-cab59dbfad4d/22-6342efb76f845.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e89830f3-1f39-4dc1-ad8d-3aba17fb329b/22-6342efb7a200a.webp)