• Mo.. Mai 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

24 மணித்தியாலத்திற்கு மேலாக காய்ச்சல் இருப்பவர்களுக்கு!

Okt. 21, 2022

இலங்கையில் 24 மணித்தியாலங்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர கூறுகையில், பருவ மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.

அடையாளம் காணப்பட்ட 31 சுகாதாரப் பிரிவுகளில் டெங்கு அவசர நிலை. கொழும்பு மாநகரப் பகுதி மற்றும் பிற பகுதிகளை உள்ளடக்கிய 10 அவசர வலையமைப்புகள் உள்ளன.

எனவே காய்ச்சல் இருந்தால் ஓய்வு முக்கியம். 24 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால், மருத்துவரை அணுகவும்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையில் நனைவதால் சளி காய்ச்சல் முழுமையாக குணமடையாமல் பாதிப்பை ஏற்படுத்துவதால் சளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் நலத்தில் மிகுந்த கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.