• Di.. Mai 12th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் ஆலயத்திற்கு சென்றவர் உயிரிழப்பு.

Nov. 1, 2022

ஆலயத்திற்கு சென்றவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மட்டுவில் தெற்கை சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்ற போது , ஆலயத்தினுள் செல்வதற்காக கால் கழுவும் இடத்தில் கால் கழுவும் போது , கால் வழுக்கி விழுந்துள்ளார்.

அதன் போது பின் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.