• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.நீர்வேலி வேவிபுரம் பகுதியில் விபரீத முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர்

Jun 10, 2024

யாழில் உள்ள பகுதியொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணி ஏல விற்பனையாளர்களுக்கு கடுமையாகும் கட்டுப்பாடுகள் !

குறித்த சம்பவத்தில் வேவிபுரம், அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஆனந்தன் முகுந்தன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்

மனவிரக்தியால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் இன்றைய தினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கார் விபத்தில் பலி!

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதே வேளை அராலி வடக்கு பகுதியிலும் இளம் பெண் தற்கொலை

யாழ்ப்பாணம், அராலி வடக்கு பகுதியில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சிவகரன் மயூரா என்ற இளம் பெண்ணே இன்றையதினம் (10-06-2024) உயிரிழந்துள்ளார்.

மேலும், குறித்த பெண்ணின் தந்தையும், அண்ணாவும் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில் அவரும் இன்று இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed