கனடாவில் ரொறன்ரோ பகுதியில் அமைந்துள்ள பிரம்டனில் 64 வயதான யோகராஜ் என்ற தமிழர் காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபரை சுமார் ஒரு வார காலமாக காணவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி க்ரிக் மற்றும் விட்டொப்பி வீதிகளுக்கு அருகாமையில் யோகராஜ் என்பவரை இறுதியாக பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, காணாமல் போயுள்ள யோகராஜ் என்பவர் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அவர், 5 அடி 2 அங்குலம் உயரமானவர் எனவும் சுமார் 150 பவுன்ட் எடையுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இறுதியாக நீல நிற சட்டையும், கருப்பு நிற காற்சட்டையும் அணிந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.ஹோண்டா ஒடிசி ரக வாகனம் ஒன்று பயன்படுத்தி இருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
- யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!