• So.. Juni 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஏழாலை பகுதியில் மர அரிவு இயந்திரத்தில் வீழ்ந்த குடும்பஸ்தர் பலி!

Mai 8, 2025

யாழில். மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாலை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த பாலசிங்கம் ஜெகாஸ் (வயது 42)  என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டில் மர அரிவு நிலையத்தை நடாத்தி வரும் அவர் , நேற்றைய தினம் வழமை போன்று மர அரிவு வேலையில் ஈடுபட்டிருந்த போது , தவறி இயந்திரத்தின் மேல் விழுந்ததில் , இயந்திரம் வெட்டி , சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.