யாழில் (Jaffna) கஞ்சாவுடன் 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் சுன்னாகம் காவல் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அவரிடமிருந்து 60 கிராம் கஞ்சா மீட்கப்பட்டது. காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.