• Mo. Apr 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணின் பதைபதைக்கும் செயல்.

Mrz 16, 2022

ஆஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணொருவர்  தனது இரண்டு பிள்ளைகளையும்  தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் உயிரிழந்துள்ள சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம் கடந்த திங்கட்கிழமை மதியம், பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகேயுள்ள John Graham Reserve-இல் இடம்பெற்றுள்ளது.

அங்குநிறுத்தப்பட்டிறருந்த Honda Jazz கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் எரிந்த காரினுள் இருந்து 40 வயது பெண், 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன.

உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளைகளும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள்  இந்தியாவின் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பாக கார் தீப்பிடித்துக்கொண்டமைக்கு வேறு நபர்கள் எவரும் காரணமாக இருந்திருக்க முடியாது எனத் தாம் நம்புவதாகவும், காருக்குள் இருந்தவர்களே தீப்பற்றவைத்திருக்க வேண்டுமெனவும் மேற்கு ஆஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இச் சம்பவம் தற்கொலையுடன் கூடிய இரட்டைக்கொலை என்ற கண்ணோட்டதில் இவ்விவகாரம் அணுகப்படுவதாக பொலிஸார் தரப்பில் கூறப்படுகிறதுகுறித்த பெண் பெர்த் Fiona Stanley வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரிந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஐந்து வருடங்களாக பெர்த் பகுதியில் வசிக்கும் இந்தக் குடும்பத்தினர் மிகவும் அன்பானவர்கள் என்றும், சம்பவம் இடம்பெறுவதற்கு முந்தைய வார விடுமுறையில்கூட தகப்பனும் பிள்ளைகளும் தங்களது வீட்டுத் தோட்டத்தில் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள் என்றும் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார்.

பொலீஸார் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள். இச்சம்பவத்திற்கு முதல்நாள் தான் தனது உறவினர்களைச் சந்திப்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற குறிப்பிட்ட பெண்ணின் கணவர், இந்த அதிர்ச்சிதரும் சம்பவத்தையறிந்து தற்போது நாடு திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை கடந்த ஜனவரி மாதம் பெர்த்தில் இலங்கைப் பின்னணிகொண்ட இந்திக குணதிலக என்பவர், தனது இரு பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்திருந்த நிலையில், தற்போது மீண்டுமொரு அவ்வாறான சம்பவம் பதிவாகியுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed