• Mi. Mai 8th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் முகநூல் நண்பரால் பாதிப்புக்குள்ளான நபர்

Apr 21, 2022

சமூக வலைதளத்தில் சந்தித்த நபரை தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபரை கனேடிய பொலிசார் கைது செய்துள்ளனர்.

ரொறன்ரோவைச் சேர்ந்த ஏஞ்சல் டன் டவலோஸ் (33) என்பவர் 23 வயது இளைஞரை பேஸ்புக் மூலம் சந்தித்தார். பின்னர் வணிக கட்டிடங்களை சுத்தம் செய்யும் பணியில் ஏஞ்சல் அந்த இளைஞனை சேர்த்தார்.

இருவரும் சேர்ந்து பல இடங்களில் வேலை செய்து கொண்டிருந்த வேளையில் அந்த இளைஞன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானான். புகாரின் பேரில் ஏஞ்சலை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் தகவல் தெரிந்தவர்கள் பொலிசாரை தொடர்பு கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed