• Fr.. Mai 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தெல்லிப்பழை பகுதியில் மூதாட்டி ஒருவரை வெட்டிக்கொலை

Mai 7, 2022

யாழ்ப்பாணம் -தெல்லிப்பழை – வித்தகபுரம் பகுதியில் தனிமையில் இருந்த மூதாட்டி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த மூதாட்டியிடம் கொள்ளையிடுவதற்காக சென்றிருந்த சிலர், தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மூதாட்டி தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed