• Mi. Mai 8th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வட்டுக்கோட்டை பகுதியில் கண்டறியப்பட இருவரின் சடலங்கள்.

Mai 27, 2022

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு சடலங்களும் மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில்  இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒருவர் 76 வயதுடைய எனவும், மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்தாகவும், மற்றொருவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed