• Mi. Mai 8th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற மானம்பூ

Okt 5, 2022

நவராத்திரி தினத்தின் இறுதிநாளான விஜயதசமி தினமான இன்று , வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மானம்பூ உற்சவம் சிறப்பு பூஜை இடம்பெற்றது.

இன்று (புதன்கிழமை) காலை 6.45 மணிக்கு விஜயதசமி – மானம்பூ உற்சவம் நல்லூர் ஆலயத்தில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது

காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் இடம்பெற்று குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலாவந்ததுடன் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும் வழிபடுவது வழக்கம் ஆகும். இந்த முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்சி தரும் தினம்தான் விஜயதசமி ஆகும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed