• Fr.. Mai 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய்.

Nov. 5, 2022

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது என யாழ்.மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மக்களிடம் கோரிக்கை

தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து இன்று டெங்கு நோய் பரவல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றுவரையான காலபகுதியில் 2774 வரையானோர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்றுவரை இந்த இந்த வருடத்தில் 8 டெங்கு நோய் இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

ஆகவே நாங்கள் பொது மக்களை டெங்கு நோயை கட்டுப்படுத்த எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.

2020 ஆம் ஆண்டில் 2530 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 2021 ஆம் ஆண்டில் 301 நோயாளர்களும் இணங்காணப்பட்டிருந்தார்கள்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து மாத ரீதியாக பார்க்கின்ற போது ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து மே, ஜூன் மாதமளவில் ஒரு அதிகரித்த பரம்பல்காணப்பட்டது.

பின்பு குறைவான நிலை காணப்பட்டு கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மீண்டும் டெங்கு நுளம்பானது அதிகரித்து செல்வதை நாங்கள் அவதானிக்க கூடியதாக உள்ளது.”என கூறியுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed