• So. Apr 28th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.மண்டதீவு பகுதியில்  சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

Nov 24, 2022

யாழ்ப்பாணம் மண்ட தீவு பகுதியில் உள்ள அட்டைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று (23) மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வண்ணாங்கேணி பளை பிரதேசத்தைச் சேர்ந்த தவராசா நிதர்சன் என்ற 21 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த காலங்களில் மண்டைதீவு பகுதியில் உள்ள அட்டைப் பண்ணையில் வேலை செய்து வந்துள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed