• Mo. Apr 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய மூதாட்டி கைது.

Nov 26, 2022

கொழும்பு புறநகர் பகுதியில் ஆலய வழிபாடுகளில் கலந்து கொண்டு ஐந்து கோடி ரூபா பணத்தை மோசடி செய்த 71 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடவத்தை பிரதேசத்தில் தனக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தை தேரருக்கு கொடுப்பதாக கூறி குறித்த அவரிடம் இருந்து இந்த பணத்தை பெற்றுள்ளார்.

களனி பிரதேசத்தில் உள்ள விகாரையின் நிர்வாகியான தேரர் ஒருவரே இந்த இந்த மோசடிக்கு உள்ளாகியுள்ளதாக இன்றைய தேசிய பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வயோதிப பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் களனி கொனவல, செலுவில பிரதேசத்தை வசிப்பிடமாகவும், கடவத்தை மற்றும் கணேமுல்ல ஆகிய இடங்களில் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர் எனவும் தெரிய வந்துள்ளது.

பெண்ணிடம் 470 இலட்சம் ரூபா பணத்தை இழந்த பிக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed