• Di. Mai 21st, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜேர்மனியிலிருந்து மஞ்சள் நீராட்டு விழா நடாத்த வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Apr 3, 2023

முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து 03.04.23 மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணும் வயோதிப தயார் ஒருவரும் உந்துருளியில் சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில் அளம்பில் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த வெளிநாட்டு பெண் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியில் பயணித்த மற்றையவர் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தின் போது சிலாவத்தை பகுதியினை சேர்ந்த ஜேர்மனியில் வசித்துவரும் 42 அகவையுடைய சிறீதர் ஜெனிற்றா என்ற குடும்ப பெண் உயிரிழந்துள்ளார்.

இவர் வெளிநாட்டில் இருந்து தனது மகளுக்கு மஞ்சல் நீராட்டுவிழா செய்வதற்காக சொந்த இடமான சிலாவத்தைக்கு வந்துள்ள நிலையில் இந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed