• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிட்சர்லாந்தில் இந்துக்களுக்கு அஸ்தியை கரைக்க அனுமதி

Jun 15, 2022

சுவிட்சர்லாந்தில் நீண்ட நாட்களாக எமது சமுதாயத்தில் சிவபதமடைந்தவர்களுக்கு , அவர்களுடைய அஸ்தியை ஆற்றில் அல்லது ஓர் நீர் நிலையில் இடுவதற்கு பல சிரமங்கள் இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் கடந்து மூன்று வருடங்களாக Lausanne Municipalité இனால் , இது சம்பந்தமான பல commissions களில் கலந்து சைவ மக்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான அஸ்தி கரைத்தல் சடங்கு முறைகளை விளக்கப்படுத்தி, இன்று அது செயல் வடிவம் பெற்று அனுமதியும் கிடைத்துள்ளது.

அதன்படி  வரும் 25/6/2022 அன்று சனிக்கிழமை காலை பத்து மணிக்கு சம்பிரதாயபூர்வமான முறையில் Le conseiller municipal Monsieur Pierre -Antoine Hildbrand தலைமையில் இந்த இடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்த தகவல் சுவிஸ் வாழ் இந்து மக்களொஇடையே பரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed