• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருகோணமலையில் இளம் தாய்க்கு நேர்ந்த சோகம்

Dez 13, 2022

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இரைப்பையழற்சி (கேஸ்டிக்) காரணமாக அனுமதிக்கப்பட்ட இளம் தாயொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒன்பதாம் திகதி கேஸ்டிக் மற்றும் குளிர் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை – தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த ஐந்து மாத கைக்குழந்தையின் தாயாரான குணசிங்க முடியன்சலாகே ஹன்சிகா பியூமாலி சமரசேன (23 வயது) எனவும் தெரியவருகின்றது.

இருப்பினும், கடந்த சில மாதங்களாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் மரணங்களின் வீதம் அதிகரித்து வருவதாகவும், அதிகளவிலான முறைப்பாடுகள் நோயாளர்களை கவனிக்காமையே காரணம் எனவும் வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed