• Mi. Apr 24th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் நடந்த கத்தி குத்து: இளம் கால்பந்து வீரர் பலி !

Dez 28, 2022

பிரித்தானியாவின் பர்மிங்காமில் இரவு விடுதியில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் 23 வயதுடைய கால்பந்து வீரர் கோடி ஃபிஷர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பர்மிங்காமின் டிக்பெத்தில் உள்ள தி கிரேன் இரவு விடுதியில் நடன தளத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குத்துச்சண்டை தினத்தன்று இரவு 11.45 மணிக்கு நடந்த இந்த கத்தி குத்து சம்பவத்தை தொடர்ந்து தி கிரேன் இரவு விடுதிக்கு வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.

கோடி ஃபிஷர் தனது நண்பர்களுடன் இரவு வெளியே சென்று கொண்டிருந்த போது, மர்ம கும்பல் ஒன்று அவரை அணுகி கத்தியால் குத்தி இருப்பதாகவும், அவரை காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்தும் அரை மணி நேரத்திற்கு பிறகு கோடி ஃபிஷர் இறந்துவிட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கால்பந்து வீரர் கோடி ஃபிஷர் மர்ம குழுவால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அத்துடன் கொலை குறித்து துப்பறியும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து சிசிரிவியை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கத்திக்குத்துச் சம்பவத்தின் போது இரவு விடுதியில் நூற்றுக்கணக்கானோர் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கால்பந்து வீரர் கோடி ஃபிஷர், சதர்ன் லீக் பிரிமியர் பிரிவு சென்ட்ரலில் இருக்கும் ஸ்ட்ராட் ஃபோர்ட் டவுன் எஃப் சி-க்கும் (Stratford Town FC) ப்ரோம்ஸ்கிரோவ் ஸ்போர்ட்டிங்கிற்காகவும் (Bromsgrove Sporting) விளையாடியுள்ளார்.

இவரது மரணம் தொடர்பில் குடும்பத்தார் அறிக்கை ஒன்றில் “எங்கள் இதயத்தை உடைத்து விட்டனர்”என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் நாங்கள் எங்களது சிறந்த நண்பனை இழந்து விட்டோம் என்று அவரது நண்பர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed