• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பிறந்த நாளில் உயிரிழந்த இளைஞர்

Jan 9, 2023

பிறந்தநாளில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் பொன்னாலைப் பிள்ளையார் கோவிலுக்குட்பட்ட குளத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் இளைஞன் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மூளாய்-வேரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கிருஷ்ணமோகன் கிருஷாந்தன் என்பவரே உயிரிழந்தவர், கடந்த 5 மாதங்களாக பொன்னாலையில் உள்ள சித்தப்பா என்பவரது வீட்டில் வசித்து வந்தார்.

இவர் தனது 21வது பிறந்தநாளான நேற்று இரவு காணாமல் போனார்.

இதையடுத்து அவரை தேடும் முயற்சியில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிணற்றில் பிணமாக கிடந்த அவர், கிணற்றுக்கு வெளியே செருப்பு மற்றும் இருசக்கர வாகனம் கிடந்தது.

உயிரிழந்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையாகி பல மாதங்களாக தெல்லிப்பா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப வட்டுக்கோட்டை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed