• Di. Apr 16th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சட்டவிரோத பயணம்; நாடுகடத்தப்படட 14 இலங்கையர்கள்!

Jan 26, 2023

ரீயூனியன்தீவில் இருந்து 38 இலங்கை சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடல்வழியாக ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் 14ம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

டிசம்பர் முதலாம் திகதி நீர்கொழும்பு துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகொன்று ஐந்து பேருடன் புறப்பட்டதாகவும் இதன் பின்னர் 13 -14ம் திகதிகளில் புத்தளத்திலிருந்து 64 குடியேற்றவாசிகள் படகில் ஏற்றப்பட்டதாகவும் தகவல்கள்

படகு டியோகார்சியாவில் 30 ம் திகதி பிரிட்டனின் கடற்படையினர் அவர்களை கைதுசெய்துள்ளனர்.

எனினும் ஆள்கடத்தல்கள்காரர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் குழுவொன்றுடன் ரீயூனியன் தீவிற்கு சென்றநிலையில் , அங்கு இவர்களை அதிகாரிகள் 14 ம் திகதி கைதுசெய்துள்ளனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் அதிகாரிகள் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர். இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் சிஐடியினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இவ்வாறு சென்றவர்களிடம் கல்பிட்டி கண்டியை சேர்ந்த ஆள்கடத்தல்காரர்கள் தலா 400,000 முதல் 1000 00 வரை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed