• Sa. Apr 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்தில் பல ஆலயங்களில் திருடிய இருவர் பொலிஸாரால் கைது

Mrz 6, 2023

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் இளவாலை பொலிஸாரால் அதிரடியாக கைது

நேற்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன்கோவிலில் நடந்த உற்சவத்தில் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் அடங்கிய கும்பலால் இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டது.

அண்மையில் ஆலயங்களில் இடம்பெற்ற பல்வேறுபட்டநகை திருட்டுகளுடன் குறித்த கும்பலுக்கு தொடர்புள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை பவுண் நகை இவ்வாறு களவாடப்பட்டது. இந்நிலையில் ஒரு பெண் (43) மற்றும் ஒரு ஆண் (வயது 26) கைது செய்யப்பட்ட அதேவேளை ஒரு பெண் தலைமறைவு ஆகியுள்ளார்.

இதன்போது திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸார் இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed