• Mi. Apr 24th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாகர்கோவிலில் 10 படகுகள் தீக்கிரை; பொலிஸார் தீவிர விசாரணை !

Mrz 22, 2023

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் நபர் ஒருவருக்கு சொந்தமான 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்றைய தினம் (22.03.2023)அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அன்டனி அருள்ராஜ் என்பவருக்கு சொந்தமான 10 படகுகளே தீக்கிரயாக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த படகுகள் தீக்கிரயாக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் இதுவரை அறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. 

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed