• Mi. Apr 24th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சென்னை வந்த புகையிரதம் கோரவிபத்து -பலர் பலி,

Jun 2, 2023

சென்னை வந்த புகையிரதம் மற்றொரு புகையிரதத்துடன் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததுடன் 179 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு புகையிரதம் யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு புகையிரதம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா புகையிரத நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன. சம்பவத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 60க்கும் மேற்பட்ட அம்புலன்ஸ்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள பேருந்துகளிலும் காயமடைந்தவர்கள் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு வருகின்றனர்.

வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புகையிரத விபத்தால் இதுவரை 179 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சுமார் 50 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed