• Mi. Mai 8th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அச்சுவேலியில் பாணுக்குள் காணப்பட்ட குண்டூசி

Okt 27, 2022

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் பாணுக்குள் இருந்து மூன்று குண்டு ஊசிகள் மீட்கப்பட்டுள்ளன. 

அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்று வியாழக்கிழமை, குடும்பஸ்தர் ஒருவர் றோஸ் பாண் வாங்கியுள்ளார். 

அந்த பாணை வீட்டே கொண்டு சென்று தமது சிறு பிள்ளைகளுக்கு வழங்கிய போதே, பாண் ஒன்றினுள் மூன்று குண்டு ஊசிகள் காணப்பட்டுள்ளன. 

அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed