• Mi. Mai 1st, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

காய்ச்சல், தலைவலி இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்

Dez 11, 2022

காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

இந்த நாட்களில் மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் இந்த வாரத்திற்குள் மாத்திரம் ஆயிரத்து 700 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 71 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed