• Mi. Mai 22nd, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பூநாகரி பகுதியில் இளம் பெண் பரிதாப மரணம்.

Apr 3, 2023

கிளிநொச்சி – பூநாகரி பகுதியில் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இளம் குடும்பப் பெண் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த வருடம் திருமணம் செய்த நிலையில் கணவர் கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வருகின்றார்.

இந் நிலையில் குறித்த பெண் டெங்கு நோயினால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சிவரூபன் கேம்சலா வயது – 26 என்ற இளம் குடும்பப் பெண் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் கிளிநொச்சி வைத்திய சாலையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed