• Di. Mai 21st, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த முதியவர்!

Apr 5, 2023

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்றைய தினம் (05-04-2023) இடம்பெற்றுள்ளது.குறித்த முதியவர் தண்ணீர் எடுக்க முற்பட்டவேளை தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக அறிய முடிகிறது.

அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் அப்புத்துரை (வயது 73) என்ற முதியவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed