• Mi. Mai 8th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உரும்பிராயில் மோட்டார் சைக்கிள் திருட்டு! ஒருவர் கைது.

Feb 21, 2022

உரும்பிராயில் நேற்று இரவு 11:30 மணியளவில் வீடொன்றை உடைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற திருடர்கள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு 11:30 மணியளவில் உரும்பிராயில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இருவர் KRM ரக மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த யாழ்.பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டனர். உடுவில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் கோண்டாவில் காணி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed