• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் .

Mrz 31, 2022

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வரட்சியான காலநிலை என்பன காரணமாக, நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலநேரம், எதிர்காலத்தில், மின்துண்டிப்பு நேர அட்டவணைக்குப் பதிலாக, மின்விநியோக நேர அட்டவணையை வெளியிடுவது இலகுவானதாக இருக்கும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போதுவரையில், நீர் மின் உற்பத்தியில், சுமார் 1, 200 மெகாவொட் மின்சாரத்தை வழங்கக்கூடிய இயலுமை இருக்கின்றபோதிலும், நீர் இன்மையால், மதிய நேரத்தில் 300 மெகாவொட் மின்சாரத்தையும், இரவு நேரத்தில் 700 மெகாவொட் மின்சாரத்தையும் மாத்திரமே வழங்கமுடியும்.

அதேநேரம், எரிபொருளில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்களில், 1, 700 மெகாட் அளவில் கொள்ளளவு இருக்கின்றபோதிலும், எரிபொருள் இன்மையால், 1,000 மெகாவொட் மின்சாரத்தை மாத்திரமே வழங்க முடியும்.

ஆனால், இரவு நேரத்தில் மாத்திரம் 1, 800 மெகாவொட் மின்சாரத்துக்கான கேள்வி உள்ளது.

எனவே, விநியோகத்தில் நிச்சயமாக வீழ்ச்சி உள்ளது தற்போது வரையில், பாஜ் மின்னுற்பத்தி நிலையத்திற்கும், களனிதிஸ்ஸ கூட்டு மின்னுற்பத்தி நிலையத்திற்கும், 1,500 மெட்ரிக் டன் எரிபொருள் மாத்திரமே கிடைத்துள்ளது.

எரிபொருளில் இயங்கும் வேறு எந்தவொரு மின்னுற்பத்தி நிலையத்திற்கும், எரிபொருள் கிடைக்கவில்லை.

தாங்கள் அறிந்த வகையில், இன்றும் நாளையும் எரிபொருள் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed