• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியாவில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு 

Nov 28, 2022

வவுனியா – புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய காட்டு யானை உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த காட்டு யானை விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கேபிளில் அகப்பட்டு நேற்று (27.11.2022) இரவு உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் யானையின் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று (28.11.2022) இடம்பெற்றதாக வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த காட்டு யானையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வடமாகாணத்திற்கு பொறுப்பான கால்நடை வைத்திய அதிகாரி வைத்திய பா.கிரிதரன் மேற்கொண்டிருந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில்  பரசங்குளம் பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed