• Do. Mai 9th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ‚9 ஏ‘ சித்தி பெற்ற இரட்டை சகோதரிகள்

Nov 29, 2022

காலி – மாபலகம பிரதேசத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சகல பாடங்களிலும் ‚ஏ‘ சித்தியைப் பெற்ற இரட்டை சகோதரிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன.

காலி , மாபலகம பிரதேசத்தில் வசிக்கும் தினுமி நிம்சரா மற்றும் ரசாரி ரன்சராய் என்ற இரட்டை சகோதரிகள் காலி, சிறி சுனந்தா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றுள்ளனர்.

இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய இருவரும் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதற்கமைய, பரீட்சைக்குத் தோற்றிய 231,982 மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 10,863 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‚ஏ‘ தேர்ச்சி பெற்றுள்ளதுடன், 6566 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைய முடியாமல் போயுள்ளனர்.

எவ்வாறாயினும், பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களை தொழில்நுட்பத் துறையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed