• Fr. Apr 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மானிப்பாயில் அபாயகரமான பொருளுடன் மூவர் கைது!

Nov 29, 2022

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சந்தேகநபர்கள் மூவர் உயிர்க்கொல்லி ஹெரோயினுடன் கைது செய்துள்ளனர்.

இக் கைது நடவடிக்கை (28-11-2022) மானிப்பாய் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தலா 30 மில்லிக்கிராம் ஹெரோயினையும் மற்றையவர் 40 மில்லிக்கிராம் ஹெரோயினையும் உடமையில் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

22, 23 மற்றும் 25 வயதுகளுடைய மூவரும் ஏழாலை, கூளாவடி மற்றும் தாவடி பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed