• Fr. Apr 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

காய்கறிகளை இப்படி சமைத்தால் தான் முழு சத்தும் கிடைக்கும்!

Dez 24, 2022

காய்கறிகள் அதிகம் சாப்பிட்டால் எந்தவித நோயும் வராது என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கும் நிலையில் காய்கறியை சில வழிமுறைகளின்படி சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

காய்கறிகள் தற்போது ரசாயன உரங்களால் விளைவிக்கப்படுவதால் காய்கறிகளை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் அதன் தோலில் உள்ள பூச்சி மருந்துகளின் தாக்கம் விலகும் என்பது குறிப்பிடத்தக்கது 

காய்கறிகளை நறுக்கியதற்கு பிறகு கழுவ கூடாது என்பதும் நறுக்கியதற்கு முன்பே கழுவி விட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீர்சத்து மிகுந்த காய்கறிகலை ஐந்து நிமிடங்கள் மற்றும் வேக வைத்தால் போதுமானது.

அதேபோல் காய்கறிகளை எண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் அதன் முழு சத்து கிடைக்காது. முட்டைக்கோஸ் தேங்காய் வெள்ளரிக்காய் தக்காளி கேரட் இவற்றை சமைக்காமல் பயன்படுத்தினால் அதிக சத்துக்கள் கிடைக்கும்

சமைக்க வேண்டிய காய்கறிகளை தேவையான அளவு தண்ணீரில் வேக வைத்து அதன் பின் அந்த தண்ணீரை வீணாக்காமல் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது 

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed