• So. Mai 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தைப்பூச நாளான இன்று இப்படி வழிபடுவதால் இத்தனை நன்மைகளா?

Feb 5, 2023

முருகப் பெருமானுக்கு எண்ணற்ற வழிபாடு தினங்கள் இருந்தாலும் கூட இந்த தைப்பூசமானது மிகவும் விசேஷமான ஒன்று.

இந்த நாளில் கந்தக் கடவுளை அவருக்கு பிடித்தது போல் வழிபாடு செய்யும் பொழுது நம் துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் தீர்வதோடு, வாழ்வில் அனைத்து செல்வ நலன்களையும் பெறலாம்.

இந்த நல்ல நாளில் அவரை வணங்கும் பொழுது இந்த ஒரு வழிப்பாட்டையும் சேர்த்து செய்தால் நம் வீட்டில் மேலும் செல்வ நிலை உயரும்.

காக்கும் கடவுளான இவரிடம் சரண் அடைந்தால் போதும் நம் துன்பங்கள் அனைத்தும் தூரப் போய் விடும். இவரின் கரம் பற்றி விட்டால் எந்த தோஷங்களும் கூட நம்மை தொடராது, கிரகங்களினால் ஏற்படும் பாதிப்பை கூட தடுத்துக் காக்கும் கடவுளாக இந்த கந்தக் கடவுள் இருப்பார்.

தைப்பூச திருநாளில் எப்படி வழிபடுவது

இந்த நாளில் காலையில் எழுந்து குளித்து முடித்து வீட்டில் பூஜை அறையெல்லாம் சுத்தம் செய்து சுவாமி படங்களை துடைத்து மஞ்சள், குங்குமம் பொட்டு இட்டு பூ வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் முருகர் விக்ரகம் அல்லது வேல் இரண்டில் எது இருந்தாலும் இந்த நாளில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் முக்கியம்.

இவை இரண்டும் இல்லை சுவாமி படம் மட்டுமே உள்ளது என்பவர்கள் படத்திற்கு மஞ்சள், குங்குமம், பொட்டு வைத்து அரளிப்பூ மாலை சாற்றினால் மிகவும் விசேஷம்.

நெய்வேத்தியம்

அத்தோடு சுவாமிக்கு வெற்றிலை பாக்கு பூ பழம் தேங்காயுடன், ஒரு டம்ளர் பாலும், சர்க்கரை பொங்கலும் நெய்வேத்தியமாக வைத்து படைத்து கொள்ளுங்கள்.

சந்தன வழிபாடு

இவையெல்லாம் செய்த பிறகு ஒரு தாம்பாள தட்டு முழுவதும் சந்தனத்தை பரப்பி விடுங்கள். அந்த சந்தனத்தின் நடுவில் சந்தனத்தாலே விநாயகரை பிடித்து வைத்து அவருக்கும் பொட்டு வைத்து ஒரு மாவிலையை சொருகி பூ வைத்து விடுங்கள்.

இப்பொழுது தட்டில் பரப்பி வைத்திருக்கும் சந்தனத்தின் மேல் ஓம் என்ற மந்திரத்தை எழுதுங்கள். இந்த மந்திரத்தை எழுதி முடித்த பிறகு ஓம் சரவணபவ என்ற இந்த மந்திரத்தை நூத்தி எட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும்.

கற்பூர தீபாராதனை

அதன் பிறகு நீங்கள் வழிபட்ட இந்த தட்டில் இருக்கும் விநாயகருக்கு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்த நாள் இந்த சந்தனம் எல்லாம் காய்ந்த பிறகு பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிள்ளையார் பிடித்து வைத்த சந்தனத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மாவிலை பூ இவற்றையெல்லாம் கால் படாத இடத்தில் சேர்த்து விடுங்கள்.

தினந்தோறும் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது இந்த சந்தனத்தை நெற்றியில் வைத்து சென்றால் நீங்கள் நினைத்த காரியம் அனைத்துமே நல்லபடியாக முடியும்.

வீட்டில் இருப்பவர்களும் பூஜை செய்த பிறகு தினமும் இந்த சந்தனத்தை நெற்றியில் வைக்கும் பொழுது உங்களின் துன்பங்கள் அனைத்தையும் தீர்த்து வைக்கும் அருமருந்தாக இந்த சந்தனம் இருக்கும்.

பாராயணம்

பூஜை அறையில் வைத்து நாம் 108 முறை பாராயணம் செய்யும் பொழுது இந்த சந்தனத்திற்கும் சந்தனத்தில் பிடித்த விநாயகருக்கும் உருவேறி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த சந்தனத்தை நாம் தினமும் பயன்படுத்தும் பொழுது தெய்வ அனுகிரகம் கிடைத்து நாம் நினைப்பவை எல்லாம் நமக்கு நடந்தேறும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த தைப்பூச திருநாளில் முருகரை வழிபடும் பொழுது இந்த ஒரு சின்ன வழிபாட்டையும் செய்து நம் வீட்டில் உள்ள துன்பங்களை எல்லாம் நீக்கி வீடு மனை என்று செல்வ செழிப்போடு நல்லதொரு வாழ்க்கையை வாழ வழி செய்து கொள்ளலாம். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed