• Mi. Mai 15th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜெர்மனியில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்

Mrz 4, 2023

இலங்கையை சேர்ந்த 34 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் ஜெர்மனியில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

உயிரிழந்த பெண் வவுனியாவை சொந்த இடமாக கொண்டவர் எனவும் இவர் 12 வருடங்களுக்கு முன்பு முல்லைத்தீவினை சேர்ந்த நபர் ஒருவரை திருமணம் முடித்து ஜெர்மனி சென்றதாகவும் அறியப்படுகின்றது. அத்துடன் குறித்த பெண் தனது கணவனை பிரிந்து  , தென்னிந்திய குடும்பம் ஒன்றுடன் வீட்டின் மேற் பகுதியில் தனிமையில் அவர் வசித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் உயிரிழந்த பெண்ணின் உறவுக்காரர் ஒருவர் ஜெர்மனியில் இருப்பதாகவும் அவர் உயிரிழந்த பெண்ணை சந்திக்க அடிக்கடி அங்கு வருபவர் என அங்கு உள்ள இந்திய குடும்பத்தவர்கள் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.

குறித்த பெண் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியாத நிலையில் மரணம் தொடர்பில் ஜெர்மனி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed