• Di. Mai 21st, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கட்டுநாயக்காவில் 2 வெளிநாட்டவர்கள் கைது

Apr 16, 2023

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏமன் மற்றும் சாட் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

துபாயில் இருந்து ஃப்ளை துபாய் விமானத்தில் வந்த அவர்கள் 39 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது மொழிப் பிரச்சினை காரணமாக அவர்கள் தடுமாறியுள்ளமை தெரியவந்துள்ளதுடன், ஆய்வின் போது சாட் மற்றும் ஏமன் நாடுகளில் இருந்து வழங்கப்பட்ட உண்மையான கடவுச்சீட்டுகளும் கிடைத்துள்ளன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed