• Fr. Mai 17th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெளிநாடு ஒன்றிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இலங்கையர்கள்

Apr 25, 2023

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்து நீண்ட காலமாக வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த 52 இலங்கையர்கள் தூதரக அதிகாரிகளால் தற்காலிக விமான அனுமதிப் பத்திரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்த பின்னர், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தற்காலிக விமான அனுமதியின் கீழ் இந்தக் குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

இந்த வகையில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஐந்தாவது குழு இதுவாகும்.

அவர்கள் 04/24 நேற்று காலை 06.05 மணியளவில் குவைத்தில் இருந்து  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த குழுவில் 17 ஆண் ஊழியர்களும் 35 பெண் ஊழியர்களும் இருந்தனர் மற்றும் அவர்கள் அனுராதபுரம், காலி, கொழும்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களாவர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed