• So. Mai 5th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மீண்டும் தீவிரமடைகிறது „மொச்சா“ புயல்.

Mai 11, 2023

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து இன்று (11) காலை தீவிரப் புயலாகவும், நள்ளிரவில் மிகத் தீவிரப் புயலாகவும் வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் கடந்த 8-ம் திகதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவியது.

தொடர்ந்து, இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்தது. நேற்றுக் காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அந்தமானின் போர்ட் பிளேயரில் இருந்து 520 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.

வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு யெமன் நாடு பரிந்துரைத்த ‘மொச்சா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது படிப்படியாக தீவிரமாகி இன்று (11) காலை தீவிரப் புயலாகவும், நள்ளிரவில் மிகத் தீவிரப் புயலாகவும் வலுவடைந்து, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed