• Mi. Mai 8th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் இரு குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் உயிரை இழந்த தமிழன் 

Sep 7, 2023

பிரித்தானியாவில் அருவியில் குளித்த போது நீரில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் ஈழத் தமிழ் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

வேல்ஸில் அமைந்துள்ள Brecon Becons அருவியில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜா விமானியாக இருந்தார்.

இவர், குறித்த அருவியில் இரண்டு சிறார்கள் உயிருக்கு போராடுவதை கண்டு அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார்.

பின்னர் சிறார்கள் தண்ணீரில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட போதிலும் மோகனநீதன் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

காவல்துறை, ஏர் ஆம்புலன்ஸ், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட அவசர சேவை துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போதிலும் மோகனநீதனின் உடலை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் அவரது சடலம் நீருக்கடியில் கேமரா மூலம் கண்டெடுக்கப்பட்டு மிகுந்த போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.

மோகனநீதனின் மறைவுக்கு அவர் செயல்பட்டு வந்த Blue Lion’s Badminton அணி நிர்வாகம் அஞ்சலி செலுத்தியுள்ளது.

அவர் பலரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்தார், மோகனநீதன் தனது புன்னகையால் தன்னை அறிந்த அனைவருக்கும் அரவணைப்பையும் அன்பையும் கொண்டு சேர்த்திருக்கிறார்” என புகழஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையில் மோகனநீதன் இறுதிச்சடங்குகளுக்காக GoFundMe பக்கம் மூலம் நிதி திரட்டப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed